2017 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியப் பளு தூக்கும் வீரரான சீமா என்பவருக்கு தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு ஆணையத்தினால் அடுத்த 4 ஆண்டுகளுக்குப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடு “மறுமலர்ச்சி மனிதன் - அருண் ஜெட்லியின் பல்வேறு முகங்கள்” என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
அருண் ஜெட்லியைப் பற்றி விவரிக்கும் இந்த புத்தகமானது தீபா வெங்கட் மற்றும் முப்பவரபு ஹர்ஷவர்தன் ஆகியோரால் தொகுக்கப் பட்டுள்ளது.
தனியார் மயமாக்கப்பட்ட இந்தியக் கப்பல் கழகத்தின் (Shipping Corporation of India - SCI) முழுநேரத் தலைவராகவும் அதன் நிர்வாக இயக்குநராகவும் (Chairperson and Managing Director - CMD) ஹர்ஜீத் கவுர் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தின் மூலம் 13வது CMDயாகவும் SCIயின் முதலாவது பெண் CMDயாகவும் இவர் உருவெடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மான் என்பவர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இளைய பந்து வீச்சாளர் என்ற ரஷீத் கானின் சாதனையை முறியடித்துள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமானது மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் ஆகிய நாடுகளை இந்தியப் பெருங்கடல் பிராந்திய (Indian Ocean Region - IOR) பிரிவில் சேர்த்துள்ளது.