விசாகா உத்சவம் என்பது ஆந்திரப் பிரதேச மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் மற்றும் விசாகப் பட்டின பெருநகரப் பகுதி வளர்ச்சி ஆணையம் ஆகியவற்றினால் விசாகப் பட்டினத்தில் நடத்தப்படும் ஒரு வருடாந்திர சுற்றுலா நிகழ்வாகும்.
குஜராத் மாநில முதல்வரான விஜய் ரூபானி அகமதாபாத்தில் 31வது சர்வதேச காற்றாடித் திருவிழாவைத் தொடங்கி வைத்துள்ளார்.
அமெரிக்காவின் பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சிச் சங்கத்தின் (Universities Space Research Association - USRA) தலைமையிலான ஒரு புதிய ஆராய்ச்சியானது பூமியின் சகோதரி கிரகமான வெள்ளிக் கிரகத்தில் செயல்பாட்டில் உள்ள எரிமலைகள் (உயிர்ப்புள்ள) இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
“எபிபானி” என்ற ஒரு கிறித்துவத் திருவிழாவானது கோவா மற்றும் கேரளா ஆகிய இந்திய மாநிலங்களின் சில பகுதிகளில் கொண்டாடப்பட்டது.
கோவாவில் இந்தக் கொண்டாட்டமானது அதன் போர்ச்சுக்கீசியப் பெயரான ‘ஃபெஸ்டா டோஸ் ரெய்ஸ்’ என்ற பெயரிலும் கேரளாவின் சில பகுதிகளில் அதன் சிரியப் பெயரான ‘டென்ஹா’ என்ற பெயரிலும் அறியப்படுகின்றது.