தொழில்துறை சார்ந்த சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் ‘காதி’ வகைக்கு ஒரு சர்வதேச வர்த்தக முத்திரையைப் பெறுவதற்காக காதி கிராமத் தொழில் துறைக் கழகமானது நடவடிக்கை எடுத்து வருகின்றது.
பாரீஸ் ஒப்பந்தமானது உலக அறிவுசார் சொத்துகள் அமைப்பால் (WIPO - World Intellectual Property Organization) நிர்வகிக்கப் படுகின்றது.
ஜனவரி 26 ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளிலும் அரசியலமைப்பின் முகவுரையை வாசிக்கச் செய்வதை மகாராஷ்டிரா மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.
அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள நீதி, சுதந்திரம் மற்றும் சமத்துவம் போன்ற மதிப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.