மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்கள் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதியன்று தங்கள் மாநிலங்களின் உருவாக்க தினத்தினைக் கொண்டாடின.
1972 ஆம் ஆண்டில் இந்த நாளில், இந்த மூன்று மாநிலங்களும் 1971 ஆம் ஆண்டின் வடகிழக்குப் பிராந்திய (மறுசீரமைப்பு) சட்டத்தின் கீழ் முழு அளவிலான மாநிலங்களாக மாறின.
நிலமதிப்பு நிறுவனமான டி.எல்.எஃப் ஆனது, சிங்கப்பூரின் இறையாண்மை நிதி நிறுவனமான ஜி.ஐ.சியின் ஆதரவுடன், சென்னையில் தரமணியில் ஒரு தொழில்நுட்பப் பூங்காவை உருவாக்க உள்ளது.
இதன் காரணமாக, சென்னையானது குருகிராமுக்கு அடுத்தபடியாக டி.எல்.எஃப் நிறுவனத்தின் இரண்டாவதுப் பெரியச் சந்தையாக மாற உள்ளது.