கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, காற்றில் பரவும் வைரஸ்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஆடை மற்றும் முகமூடிகள் உள்ளிட்ட அனைத்து வகையான தனிப்பயனர் பாதுகாப்பு உபகரணங்களையும் ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 நாடுகளின் மாநாட்டை நடத்துவதற்காக மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் ரூ. 100 கோடி நிதியை ஒதுக்கியுள்ளார்.
கனடாவின் கிறிஸ்டின் சின்க்ளேர் என்பவர் சர்வதேச கால்பந்தில் அனைத்து நிலையிலும் அதிக கோல்களை அடித்த வீரராக உருவெடுத்துள்ளார்.
சின்க்ளேர் தற்பொழுது சர்வதேச அளவில் 185 கோல்களை அடித்துள்ளார். இது அமெரிக்க வீரர் வாம்பாக் என்பவர் அடித்துள்ள 184 கோல்களை விட அதிகமாகும்.