ஈராக் நாட்டின் புதிய பிரதமராக முகமது தவ்ஃபிக் அல்லாவி நியமிக்கப்பட்டுள்ளார். இது 2019 ஆம் ஆண்டின் ஈராக் புரட்சி அல்லது திஸ்ரின் அல்லது அக்டோபர் புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட நிகழ்வாகும்.
அகில இந்தியப் பத்திரிக்கை வெளியீட்டு (All India Reporters - AIR) ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் ‘கற்றல் மற்றும் சம்பாதித்தல்’ என்ற ஒரு திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr Ambedkar Law University - TNDALU) முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டமானது சட்ட மாணவர்கள் தாங்கள் சட்டப் படிப்பைத் தொடரும் போதே சம்பாதிக்கவும் வழிவகை செய்கின்றது.
புது தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் உதயனோ உட்சவத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்.
அங்கு உள்ள முகலாயத் தோட்டங்கள் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை பொது மக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப் பட்டிருக்கும்.
ஹர்மீத் தேசாய் என்பவர் யுடிடி 81வது தேசிய மேசைப் பந்தாட்ட சாம்பியன்ஷிப்பில் தனது முதலாவது தேசிய ஆண்கள் ஒற்றையர் மேசைப் பந்தாட்டப் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்தப் போட்டியானது தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள சரூர்நகர் உள்ளரங்க மைதானத்தில் நடைபெற்றது.
உலகின் மிகப்பெரிய சூரியத் தொலைநோக்கியானது சூரியனின் முதலாவது விரிவான படத்தை வெளியிட்டுள்ளது.
டேனியல் கே. இனோயி சூரியத் தொலைநோக்கியானது (Daniel K. Inouye Solar Telescope - DKIST) உலகின் மிகப்பெரிய சூரியத் தொலைநோக்கி ஆகும்.
மணிப்பூரைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனையான பாலா தேவி என்பவர் ஒரு வெளிநாட்டு அமைப்பிடமிருந்து தொழில்முறைசார் ஒப்பந்தத்தைப் பெற்ற முதலாவது இந்திய பெண் கால்பந்து வீராங்கனை என்ற சாதனையைப் படைத்து உள்ளார்.
இவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கால்பந்து நிறுவனமான ரேஞ்சர்ஸ் எஃப்சி என்ற நிறுவனத்துடன் 18 மாத கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் மற்ற 13 விளையாட்டு வீரர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.