குழாய் நீரானது இந்தியத் தர நிர்ணய விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் பகுதிகளில் உள்நாட்டு எதிர்ச் சவ்வூடு பரவல்அமைப்புகளைத் தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட டெரெப்தாலிக் அமிலத்தை (Purified Terephthalic Acid - PTA) இறக்குமதி செய்வதற்கான பொருள் குவிப்புக்கு எதிரான வரியை மத்திய அரசு ரத்து செய்வதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
ஐசட்நகரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் - இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனமானது (Indian Veterinary Research Institute - IVRI) மரபு வழிப் பன்றிக் காய்ச்சல் (classical Swine Fever - CSF) செல் தடுப்பூசியை உருவாக்கி வருகின்றது.
CSF என்பது பன்றிகளில் ஏற்படும் மிக முக்கியமான நோய்களில் ஒன்றாகும். இது அதிக அளவிலான இறப்புகளை ஏற்படுத்துகின்றது.
நாசாவைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் என்ற ஒரு பெண்மணி விண்வெளியில் மிக நீண்ட நாட்கள் தங்கியிருந்து, பின்னர் தற்பொழுது பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளார்.
இவர் 328 நாட்கள் (11 மாதங்கள்) சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station - ISS) இருந்துள்ளார்.
மேற்கு ரயில்வே துறையானது முதன்முறையாக மின்சார என்ஜின்களின் அடையாளக் குறியிடுதலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ரயில்வே துறைக்குக் கூடுதலாக ரூ. 1.05 கோடி வருவாயை ஈட்ட உதவ இருக்கின்றது.
மேற்கு ஒடிசா & சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சில பகுதிகள் ஆகியவற்றின் ஒரு முக்கியமான பொதுச் சுகாதார மையமான விம்சார் என்ற மையத்தில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இறந்துள்ளனர்.
விவசாயிகளின் இந்த இறப்புகளுக்குக் காரணம் பாராக்வாட் எனப்படும் விவசாய வயல்களில் பயன்படுத்தப்படும் ஒரு களைக் கொல்லியாகும்.