தென்னிந்திய மாநிலமான கேரளாவில் 3 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் கேரள அரசு கொரோனா வைரஸ் தொற்றுநோயை “மாநில அவசரநிலை” என்று அறிவித்துள்ளது.
கேரள மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.
எஸ்பிஐ கிரீன் மராத்தானின் மூன்றாம் பதிப்பானது சென்னை பெசண்ட் நகரில் நடைபெற்றது.
சுத்தமான மற்றும் பசுமையான நகரத்தை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஓட்டப் பந்தய வீரர்களுக்கு கரிமச் சட்டை வழங்கப் பட்டது.
சர்வதேச தரத்துடன் கூடிய புதிய கிரிக்கெட் அரங்கம் ஒன்றை சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.