புதுமையான ஒரு வைரசான கொரோனா என்ற வைரஸ் பரவுவதால் ஏற்பட்ட நோயான COVID - 2019 பரவுதலின் மையமாக ஹூபே மாகாணம் இருந்து வருகின்றது.
மத்திய சீனாவில் அமைந்துள்ள இந்த மாகாணத்தின் தலைநகரம் வுஹான் ஆகும்.
இந்தியா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் பல துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்கும் விதமாக ஏழு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்தத் துறைகள் முதலீடு, போக்குவரத்து, துறைமுகங்கள், கலாச்சாரம், தொழில்துறை மற்றும் அறிவுசார் சொத்துரிமை போன்றவை ஆகும்.
ஆறாவது சர்வதேச காலநிலைச் சேவைகள் குறித்த மாநாட்டின் போது, இந்தியா ஒரு ‘பத்தாண்டு முன்கணிப்பு’ முறையைத் திட்டமிட்டுள்ளதாக மத்தியப் புவி அறிவியல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த மாநாடானது பூனாவில் உள்ள வெப்பமண்டலவியல் வானிலை ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்றது.
நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவரான ராஜீவ் குமார் தலைமையிலான குழு ஒன்று ஒருங்கிணைந்த சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பிற்கான கொள்கைப் பரிந்துரைகளைத் தயாரிக்க இருக்கின்றது.
சமூகப் பாதுகாப்பு என்பது வறுமை மற்றும் பாதிப்புகளைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களின் தொகுப்பாக வரையறுக்கப் படுகின்றது.
மகாராஷ்டிர மாநில அரசானது பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மாநிலத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் தேசிய கீதத்தைப் பாடுவதைக் கட்டாயமாக்கியுள்ளது.
பிப்ரவரி 19 ஆம் தேதி சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்த தினமாகும்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தமானது பிப்ரவரி 12 அன்று திருத்தி இயற்றப்பட்டது.
கின்னஸ் சாதனைப் புத்தகத்தின் படி, ஜப்பானிய மனிதர் சிட்டெட்சு வடனபே என்பவர் 112 ஆண்டுகள் மற்றும் 344 நாட்கள் வயது கொண்ட உலகின் மிக வயதான ஆணாக சாதனை படைத்துள்ளார்.
உலகின் மிக வயதானப் பெண்மணியும் ஒரு ஜப்பானியரான 117 வயது கொண்ட கேன் தனகா என்பவராவார்.
முக நூலிற்கு (பேஸ்புக்) சொந்தமான கட்செவி அஞ்சலானது (வாட்ஸ்அப்) உலகின் இரண்டாவது பெரிய சமூக ஊடகத் தளமாக உருவெடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் மகளிர் T20 உலகக் கோப்பைக்கான ஐ.சி.சி கிரிக்கெட் போட்டியின் இந்திய நடுவர்களின் பட்டியலில் நிதின் மேனன் மட்டுமே இடம் பெற்று உள்ளார்.