பிறரின் உதவியுடன் தற்கொலை செய்து கொள்வதற்கான தடையை ஜெர்மனியின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிறரின் உதவியுடன் தற்கொலை செய்தலானது அந்நாட்டின் 2015 ஆம் ஆண்டுச் சட்டத்தால் தடை செய்யப் பட்டுள்ளது.
பிறரின் உதவியுடன் தற்கொலை செய்தல் என்பது பொதுவாக ஒரு மருத்துவர் அல்லது சுகாதாரச் சேவை வழங்குபவரின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் தற்கொலை ஆகும்.
இந்தியத் தேர்தல் ஆணையமானது எதிர்வரும் மாநிலங்களவைத் தேர்தலுக்காக தமிழகத் தேர்தல் அதிகாரியாக கே. சீனிவாசன் என்பவரை நியமித்துள்ளது.
FICCI (இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு - Federation of Indian Chambers of Commerce and Industry) அமைப்பானது ‘2020 ஆம் ஆண்டின் இந்தியா - நியூசிலாந்து வர்த்தக மன்றத்தின்’ சந்திப்பை புது தில்லியில் ஏற்பாடு செய்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் சித்ரக்கூட்டில் 296 கி.மீ தொலைவுள்ள பண்டேல்கண்ட் அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்திய ரயில்வேயானது தனது முதலாவது ‘ரயில்களில் உணவு விடுதிகளை’ (Restaurant on Wheels) மேற்கு வங்கத்தின் அசன்சோல் ரயில் நிலையத்தில் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, நிக்கோசியாவில் நடைபெறும் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பையில் இருந்து இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் அணி விலகியுள்ளதாக இந்திய தேசியத் துப்பாக்கிச் சுடுதல் சங்கம் (National Rifle Association of India - NRAI) அறிவித்துள்ளது.