விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் மார்ச் 1 அன்று நாட்டப்பட்டது.
முதலாவது பிரசவத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் ஒரு பெண் அரசு ஊழியர் தனது இரண்டாவது பிரசவத்தின் போது ஊதியத்துடன் கூடிய மகப்பேறு சலுகைகளைப் பெறுவதற்குத் தகுதியற்றவர் என்று மதராஸ் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மனித உரிமைகளுக்கான ஐ.நா ஆணையத்தின் உயர் ஆணையரான மைக்கேல் பேச்லெட் என்பவர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (Citizenship Amendment Act - CAA) எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.