பாலியல் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தின் உலக தினமானது 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகின்றது.
2020 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதியன்று கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப் பட்டது.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவின் புதிய தலைவராக இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சுனில் ஜோஷியை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நியமித்துள்ளது.
தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டிற்காக (National Population Register - NPR) 2010 ஆம் ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்டுப் பணிகளை மேற்கொள்ள ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.