நுபுர் குல்ஸ்ரேஸ்தா என்பவர் இந்தியக் கடலோரக் காவல் படையின் துணைப் பொது ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற முதலாவது பெண்மணியாக உருவெடுத்துள்ளார்.
மகராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் விமான நிலையமானது சத்ரபதி சாம்பாஜி மகாராஜ் விமான நிலையம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
சாம்பாஜி என்பவர் மராத்தியப் பேரரசின் இரண்டாவது ஆட்சியாளர் ஆவார்.
இவர் மராத்தியப் பேரரசைத் தோற்றுவித்தவரான சிவாஜி மற்றும் அவரது முதல் மனைவியான சாய்பாய் ஆகியோரின் மூத்த மகன் ஆவார்.
மார்ச் 23 ஆம் தேதியன்று, பஞ்சாப் மாநிலம் முழுவதும் எந்தவித விதிவிலக்கும் இல்லாமல் முழு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்தது. கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கைப் பிறப்பித்த முதலாவது மாநிலமாக பஞ்சாப் மாநிலம் உருவெடுத்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியானது தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக வேலூரில் நடமாடும் பணமெடுப்பு இயந்திரத்தை (ATM) அமைத்துள்ளது.