இந்தியப் பழங்குடியினக் கூட்டுறவுச் சந்தையிடல் வளர்ச்சிக் கூட்டமைப்பானது யுனிசெப் அமைப்புடன் சேர்ந்து பழங்குடியின வாசிகள் கூட்டாக இணைந்து பாதுகாப்புடன் பணியாற்றுவதற்காக டிஜிட்டல் தகவல் தொடர்பு உத்தியைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டமானது சமூக விலகலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.
தேசிய தலைநகர்ப் பகுதியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஷீல்ட் என்ற பெயரில் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையை (Operations Shield) தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கியுள்ளார்.
SHIELD என்பது முடக்குதல், வீடுகளில் தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், உள்ளூர் சுகாதாரம் மற்றும் வீடுகளுக்கே சென்று சோதனையிடல் என்பதைக் குறிக்கின்றது.
பஞ்சாப் மாநில அரசானது அம்மாநிலத்தில் கோவிட் – 19 தொற்று நோய்க்கான முடக்கத்தை மே ஒன்றாம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஒடிசாவிற்குப் பிறகு ஊரடங்கை நீட்டித்த இரண்டாவது மாநிலம் பஞ்சாப் ஆகும்.
பஞ்சாப் மாநிலம் குளிர்கால – வசந்த காலப் பயிர்களை அறுவடை செய்வதற்காக முடக்கத்திலிருந்து சில மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு விதிவிலக்கு அளித்துள்ளது.