தமிழ்நாடு மாநிலத் தலைமைச் செயலாளரான K. சண்முகத்தின் பதவிக் காலமானது அடுத்த 3 மாதத்திற்கு, அதாவது அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
மத்திய அரசனாது இந்தப் பதவி நீட்டிப்பிற்கான தனது ஒப்புதல் குறித்து மாநில அரசிடம் கூறியுள்ளது.
சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலமானது ஸ்பந்தன் என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சாரமானது காவல் துறையினரிடையே சகோதரச் சண்டை மற்றும் தற்கொலை ஆகியவற்றைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் வனப் பரப்பை அதிகரிப்பதற்காக “Thank Mom” (நன்றி அன்னை) என்று பெயரிடப்பட்ட ஒரு மரம் நடும் இயக்கமானது தொடங்கப் பட்டுள்ளது.
கிருஷ்னேந்து மஜும்தர் என்பவர் பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலை நிறுவனத்தின் (BAFTA - British Academy of Film and Television Arts) புதிய தலைவராக உருவெடுத்துள்ளார்.
BAFTAயின் 73 ஆண்டு கால வரலாற்றில் புகழ்பெற்ற இப்பதவிக்கு நியமிக்கப்படும் முதலாவது உலகளாவிய இந்தியர் இவராவார்.
தமிழ்நாடு நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த 1999 ஆம் ஆண்டு பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பிரஜேந்திர நவநீத் என்பவரை உலக வர்த்தக அமைப்பின் இந்தியாவிற்கான புதிய தூதராக இந்தியா நியமித்துள்ளது.
பிரதமர் தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது குஜராத் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த 1996 ஆம் ஆண்டு IAS அதிகாரியான ராஜீவ் தப்னோ என்பவரை அடுத்த 3 ஆண்டுக் காலத்திற்கு உலக வங்கியின் செயல் இயக்குநருக்கான ஒரு மூத்த ஆலோசகராக நியமித்துள்ளது.
கூகுள் நிறுவனமானது “சோடர்” என்ற ஒரு புதிய செயலியை உருவாக்கியுள்ளது.
இது நோய்த் தொற்று உள்ள ஒரு நபர் அந்தச் செயலியின் பயனாளியை நெருங்கும் போது, அப்பயனாளிக்கு அது குறித்த தகவலைத் தெரிவிக்கும்.
ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநரான கிரிஷ் சந்திரா முர்மு “மேரா வெட்டன்” என்ற பெயரில் ஜம்மு காஷ்மீர் மாநிலப் பணியாளர்களின் ஊதியக் கண்காணிப்பு குறித்த கைபேசிச் செயலியைத் தொடங்கி வைத்துள்ளார்.
உலகப் பூச்சி தினமானது பூச்சி மேலாண்மையானது எவ்வாறு வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்க உதவும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 06 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
இந்தத் தினமானது சீனப் பூச்சிக் கட்டுப்பாட்டு மன்றத்தினால் தொடங்கப் பட்டு உள்ளது.