எம்எஸ்டிஇ – ஐபிஎம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியானது அதிக எண்ணிக்கையிலான வேலை தேடுபவர்களை அடைவதற்காகவும் இந்தியாவில் வணிக முதலாளிகளுக்கு புதிய வளங்களை அளிப்பதற்காகவும் வேண்டி “திறன் கட்டமைப்பை வளர்த்தல்” என்ற ஒரு இலவச டிஜிட்டல் கற்றல் இணைய தளத்தை வெளியிட்டுள்ளன.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படையானது அடுத்த ஆண்டின் மார்ச் மாதத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது நிரந்தர இராணுவ தளத்தை அமைக்க இருக்கின்றது.
ஒஎன்ஜிசி விதேஷ் நிறுவனத்திற்கு “Shwe எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டத்தின்” மேம்பாட்டிற்காக மத்திய அரசினால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த “Shwe எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டமானது” மியான்மரில் அமைந்து உள்ளது.