பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையமானது, உள்நாட்டிலேயே மேம்படுத்தப் பட்ட விமான வானிலைக் கண்காணிப்பு அமைப்பை (Aviation Weather Monitoring System) பெறும் இந்தியாவின் முதல் விமான நிலையமாக திகழ்கிறது.
உலகின் மிகப்பெரிய தேர்த் திருவிழா யாத்திரையானது ஒடிசாவின் கடற்கரை மாவட்டமான பூரி எனும் மாவட்டத்தில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் நடைபெற்றது.
இன்போசிஸ் நிறுவனம் 2040 ஆம் ஆண்டிற்குள் நிகர-சுழிய கார்பன் நிலையை அடைய அமேசான் மற்றும் குளோபல் ஆப்டிமிஸம் ஆகிய நிறுவனங்களுடன் காலநிலை உறுதிமொழியில் கையெழுத்திட்ட முதல் இந்திய நிறுவனமாக மாறியது.
இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே மண்டலமானது தன்னியக்க பயணச் சீட்டுச் சரிபார்ப்பு மற்றும் நிர்வாக அணுகல் (Automated Ticket Checking & Managing Access) இயந்திரத்தை நாக்பூர் ரயில் நிலையத்தில் நிறுவியுள்ளது.
HDFC எர்கோ மற்றும் ஐக்கியப் பேரரசைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ட்ரோபோகோ ஆகிய இரண்டும் கூட்டாக ‘பறக்கும் போது பணம் செலுத்துங்கள்’ (pay as you fly) எனும் இந்தியாவின் முதல் ஆளில்லா விமானங்களுக்கான காப்பீட்டை அறிமுகப் படுத்தியுள்ளன.
2020 ஆம் ஆண்டில், பசுமை மிசோரம் தினமானது ஜூன் 11 அன்று இந்தியாவில் மிசோரம் மாநிலம் முழுவதும் அனுசரிக்கப் பட்டது.