TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 7 , 2020 1450 days 738 0
  • விகே யாதவ் என்பவர் இரயில்வே வாரியத்தின் முதலாவது தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
    • இரயில்வேயின் வரலாற்றில் இந்தப் பதவியை வகிக்கும் முதலாவது நபர் இவராவார்.  
  • உஷா பதே என்பவருக்கு விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு முகமையின் பொது இயக்குநர் என்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதலாவது பெண் மற்றும் மூன்றாவது ஐஏஎஸ் அதிகாரி இவராவார்.
  • அதானி குழுமமானது மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் 74% பங்கை வாங்கியுள்ளது.
    • இது தற்பொழுது GMR குழுமத்திற்கு (Grandhi Mallikarjuna Rao groups) பின்பு இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய தனியார் செயல்பாட்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. GMR குழுமமானது தில்லி மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களை நிர்வகித்து வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்