TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 18 , 2020 1410 days 566 0
  • ராஷ்டிரிய காமதேனு ஆயோக்கின் தலைவரான வல்லப பாய் கத்திரியா அவர்கள் கௌசத்வா கவச்என்ற சில்லு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • இது மாட்டுச் சாணத்திலிருந்துத் தயாரிக்கப் பட்டதாகும். மேலும் இது  கைபேசியிலிருந்து வரும் கதிரியக்கத்தைக் குறைப்பதாகக் கூறப் படுகின்றது.
  • இந்தியாவின் டாடா கன்சல்டன்சி நிறுவனமானது முதன்முறையாக ஒரு ஆண்டில் உலகின் மிகவும் மதிப்புமிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக உருவெடுத்து, அக்சென்ஞ்ர் நிறுவனத்தை முந்தியுள்ளது.
  • கோடக் பரஸ்பர நிதி நிறுவனத்தின் மேலாண் இயக்குநரான நிலேஷ் ஷா அவர்கள் இந்தியாவின் பரஸ்பர நிதியக் கூட்டமைப்பின் (Association of Mutual Funds) தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவர்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 7வது நீதி அமைச்சர்கள் (சட்டம்) சந்திப்பைக் காணொலி வாயிலாக நடத்தினார்.
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் அவர்கள் ரூ.75 மதிப்புடைய ஒரு நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளார்.
  • இந்திய அரசு தொலைத் தொடர்பு அலைவரிசை ஒதுக்கீட்டை முறைப்படுத்துவதற்காக கேபினெட் செயலாளரான ராஜிவ் கவ்பா தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
    • இந்தக் குழுவானது இரயில்வே, பாதுகாப்பு, உள்துறை, தொலைத் தொடர்பு, விண்வெளித் துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை ஆகிய துறைகளின் செயலாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்