TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 15 , 2020 1382 days 643 0
  • இந்திய அரசின் மின்சாரத் துறை அமைச்சகமானது ஓர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
    • அதன்படி அனைத்து மின்சார விநியோக நிறுவனங்களையும் எரிசக்தி பாதுகாப்புச் சட்டம், 2001 என்ற சட்டத்தின் படி இணங்க அது வலியுறுத்துகிறது.
  • நோகோர்னோ-காராபாக் பிராந்தியத்தில் நடந்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளன.
    • இந்த நாடுகளுக்கு இடையிலான சமாதான ஒப்பந்தத்திற்கு இரஷ்யா நடுவண் முறை செய்தது.
  • எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் அவர்கள் ‘ஹொவ் டு பீ அ ரைட்டர்’ (How To Be A Writer) என்ற ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.
  • ஜோ பிடனின் கோவிட்-19 பணிக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் செலின் கவுண்டர் என்பவர் இடம் பெற்றுள்ளார்.
    • இவரது தந்தை ஈரோட்டிற்கு அருகிலுள்ள மொடக்குறிச்சியின் அருகேயுள்ள பெருமாள்பாளையம் என்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
  • இந்திய இராணுவமானது பயிற்சியளிக்கப்பட்ட இருபது குதிரைகள் மற்றும் கண்ணி வெடிகளைக் கண்டறியும் நாய்களை வங்கதேச இராணுவத்திற்குப் பரிசளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்