TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 6 , 2020 1360 days 598 0
  • உத்தரகாண்ட் மாநிலமானது கலாதுங்கி-நைனிடால் என்ற நெடுஞ்சாலையின் குறுக்கே தனது முதலாவது சுற்றுச்சூழல் சார் பாலத்தைக் கட்டமைக்கின்றது.
    • இந்தப் பாலமானது மூங்கில், புல் மற்றும் கயிறு போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் முழுவதும் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றது.
  • இராஜஸ்தான் முதல்வரான அசோக் கெலாட் அவர்கள் நாட்டின் முதலாவது  உறுப்பு தான நினைவகத்தை ஜெய்ப்பூரில் திறந்து வைத்தார்.
  • பேட்டா நிறுவனத்தின் உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப் பட்ட முதலாவது இந்தியராக சந்தீப்  கட்டாரியா என்பவர் உருவெடுத்துள்ளார்.
  • மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லா அவர்கள் மக்களவையின் பொதுச் செயலாளராக மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான உத்பல் குமார் சிங் என்பவரை கேபினட் செயலாளர் அந்தஸ்தில் நியமித்துள்ளார்.
    • மேலும் சபாநாயகர் அவர்கள் இந்தப் பதவியிலிருந்து விடைபெறும் சினேகலதா ஸ்ரீவத்சவா என்பவரை மக்களவையின் ஒரு கௌரவ அதிகாரியாகவும்  நியமித்து உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்