மத்திய ஆயுதக் காவல் படைக்கான ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
ஹரித்துவாரைச் சேர்ந்த பத்தொன்பது வயது மாணவியான ஸ்ரீஸ்தி கோஸ்வாமி என்பவர் தேசியப் பெண் குழந்தை தினத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு நாள் முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
இமாச்சலப் பிரதேசமானது தனது 50வது மாநில தினத்தை 2021 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று கொண்டாடியது.
இது 1971 ஆம் ஆண்டு 25 ஜனவரி அன்று இந்தியாவின் 18வது மாநிலமாக உருவெடுத்தது.
முதல் பி.டி.ஆர் (போடோலாண்ட் பிராந்திய மண்டலம்) ஒப்பந்த நாள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று அசாமில் கொண்டாடப் பட்டது.
ஸ்பெயினில் 590 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் கட்டும் ஒரு ஒப்பந்தத்தில் ஸ்பெயினும் பிரான்சும் சமீபத்தில் கையெழுத்திட்டன.
இது ஐரோப்பாவின் மிகப்பெரிய ஒரு சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையமாக அமையும்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் (Tel Aviv) ஒரு தூதரகத்தை அமைக்க ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியிலும் தனது தூதரகத்தை இஸ்ரேல் அதிகாரப் பூர்வமாக திறந்துள்ளது.