TNPSC Thervupettagam
September 20 , 2021 1071 days 546 0
  • தொலைத்தொடர்பு துறையில் தன்னிச்சையான வசதி மூலம் 100% அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • “சமூக நீதி” என்ற புதிய ஒரு பாடத் திட்டமானது சென்னைப் பல்கலைக்கழகத்தில் அடுத்தக் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் “அண்ணாவின் தமிழியம்” என்ற ஒரு புதிய குறுகிய காலப் படிப்பானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • BRICS நாடுகளின் வரி ஆணையங்களின் தலைவர்களுடைய ஒரு சந்திப்பானது இந்தியாவின் தலைமையின் கீழ் நடத்தப் பட்டது.      
    • இது “கோவிட் – 19 தொற்றினால் ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் இந்த டிஜிட்டல் சகாப்தத்திலும் வரி நிர்வாகத்தின் வணிகச் செயல்முறைகளை மறு வரையறை செய்தல்” என்ற பரந்த ஒரு கருத்துருவுடன் இந்தச் சந்திப்பு நடத்தப் பட்டது.
  • பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மைத் துறையில் ஒத்துழைப்பு குறித்து இத்தாலி நாட்டுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்