TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 2 , 2018 2331 days 769 0
  • மூத்த பத்திரிக்கையாளர் இராகுல் மகாஜன் மாநிலங்களவை தொலைக்காட்சியின் புதிய தலைமை செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவை தொலைக்காட்சியானது மாநிலங்களவையால் நிர்வகிக்கப்படுகிறது.
    • பிரசார் பார்தி குழுமத்தின் தலைவர் திரு.சூர்யப்பிரகாஷ் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இராகுல் மஹாஜன் புதிய தலைமை செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • புதிய இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு “புதிய இந்தியாவிற்கான ஓட்டம்“ (Run for New India) மாரத்தானை குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • HIV/AIDSஆல் பாதிக்கப்பட்ட2மில்லியன் மக்கள் குறைந்தபட்சம் ஆண்டிற்கு ஒரு முறையாவது இலவசமாக பரிசோதனை செய்து கொள்வதற்கான திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.
    • இந்த சோதனை ரத்தத்தில் RNAவின் அளவை அளவிடுவதோடு, வைரஸ் பெருக்கத்தையும் கண்டறியும். வைரஸ் பெருக்கமானது எதிர் ரெட்ரோவைரஸ் சிகிச்சையின் தரத்தை கண்காணிப்பதற்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்