புதுச்சேரியானது “Zero Covid by Feb28” (பிப்ரவரி 28க்குள் சுழிய கோவிட்) என்ற பெயரில் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இது அந்த ஒன்றியப் பிரதேசத்தில் 2021 ஆம் ஆண்டின் பிப்ரவரி இறுதிக்குள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லாதவாறு உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேக்னா பந்த் அவர்கள் “The Terrible, Horrible, Very Bad Good News" என்ற ஒரு புதிய புத்தகத்தை எழுதியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச்சில், மகாராஜா சுஹெல்தேவ் நினைவிடத்திற்கு பிரதமர் அவர்கள் இணைய வழியில் அடிக்கல் நாட்டினார்.
சர்வதேச சூரிய மின்சக்தி உற்பத்திக் கூட்டமைப்பானது டாக்டர் அஜய் மாத்தூரை அதன் புதிய தலைமை இயக்குநராக அறிவித்துள்ளது.
நீதிபதி புலிகோரு வெங்கட சஞ்சய் குமார் அவர்கள் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்று உள்ளார்.
மரப் பொம்மைகள், உள்ளூர் கலைப்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை ஊக்குவிக்க மகாராஷ்டிர மாநில அரசானது பிளிஃப்கார்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
முன்னாள் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ டிராகி அவர்கள் இத்தாலியின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.