TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 16 , 2021 1260 days 690 0
  • சுவாமி சித்பவானந்தா எழுதிய ‘பகவத் கீதை’ நூலின் கிண்டில் பதிப்பை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டுள்ளார்.
    • சுவாமி சித்பவானந்தாஜி என்பவர் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள திருப்பரைத்துரை என்ற இடத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா தபோவனம் ஆசிரமத்தை நிறுவியவர் ஆவார்.
  • ஈக்வடாரின் சங்காய் எரிமலையானது சமீபத்தில் வெடித்துச் சிதறியது.
  • பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சினைகள் குறித்த பிரிக்ஸ் தொடர்பு குழுவின் தலைவர்கள் இந்தியாவின் தலைமையின் கீழ் தங்கள் முதல் சந்திப்பை மேற்கொண்டு உள்ளனர்.
    • இந்த ஆண்டிற்கான பிரிக்ஸின் கருத்துரு "BRICS@15: Intra BRICS Cooperation for Continuity, Consolidation, and Consensus" என்பதாகும்.
  • சாலைகளில் உள்ள அனைத்து மதக் கட்டுமானங்களையும் அகற்ற உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
  • ஜார்க்கண்ட் அமைச்சரவையானது தனியார் துறையில் 75 சதவீத வேலைகளை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கும் ஒரு வேலைவாய்ப்புக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
    • ஜார்க்கண்டிற்கு முன்பு, ஹரியானா மாநில அரசாங்கமும் இதே போன்ற ஒரு கொள்கைக்கு ஒப்புதல் அளித்திருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்