TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 25 , 2021 1190 days 530 0
  • நேபாளத்தின் அதிபரான பித்யா தேவி பண்டாரி அவர்கள் 2021 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதியன்று அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையைக் கலைத்தார்.
    • அந்நாட்டின் தற்காலிகப் பிரதமரான K.P. சர்மா ஓலி அவர்கள் தலைமையிலான அமைச்சரவைக் குழுவின் பரிந்துரையின் படி இந்த முடிவானது மேற்கொள்ளப் பட்டதோடு அதற்கான தேர்தல் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்தப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
  • பீகார் அரசானது மாநிலம் முழுவதும் கோவிட் – 19 தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டிருக்கும் நோயாளிகளை முறையாக கண்காணிப்பதனை உறுதி செய்வதற்காக “HIT Covid” எனும் செயலியைத்  தொடங்கியுள்ளது.
    • HIT (Home Isolation Tracks) என்பதன் விரிவாக்கம் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டோரைக் கண்காணித்தல் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்