TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 5 , 2021 1179 days 591 0
  • உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான அருண் குமார் மிஷ்ரா அவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.  
    • பிரதமர், உள்துறை அமைச்சர், மாநிலங்களவையின் துணைத் தலைவர், மக்களவையின் சபாநாயகர் மற்றும் மாநிலங்களவையின் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய ஒரு தேர்வுக் குழுவினால் இவர் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
  • ஈரானிய நாட்டுக் கடற்படையின் மிகப்பெரிய போர்க் கப்பலானது (கார்க்) தீப்பிடித்து ஓமன் வளைகுடாவில் மூழ்கியது (ஜாஸ்க் எனும் ஈரானியத் துறைமுகம் அருகே).
    • கார்க் எனும் இந்தக் கப்பலானது கடற்படையின் மற்ற கப்பல்களுக்கு வழங்கீடுகளை கொண்டு செல்லவும் பயிற்சிகளை மேற்கொள்ளவும் வேண்டி பயன்படுத்தப் பட்டது.
  • SARS-CoV-2 வைரசிற்கு எதிராக சர்வதேச அளவில் தடுப்பு மருந்து வழங்கும் தனது முயற்சியைத் துரிதப்படுத்தும் வகையில் UNICEF அமைப்பானது ஒரு தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனமான மாடெர்னாவுடன் தடுப்பூசி வழங்கீட்டிற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
    • இந்த வழங்கீட்டு ஒப்பந்தத்தின் கீழ், UNICEF அமைப்பானது, 34 மில்லியன் அளவிற்கு கோவிட்-19 தடுப்பு மருந்துகளைப் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்