TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 7 , 2021 1146 days 484 0
  • இந்தியா மற்றும் காம்பியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஆளுகை சீர்திருத்தங்கள் மீதான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது.
    • பணியாளர் நிர்வாகம் மற்றும் ஆளுகை (ஆட்சி முறை) சீர்திருத்தங்களில் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு ஒத்துழைப்பினை நன்கு வலுப்படுத்தி மேம்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
  • இத்தாலியின் கசீனோ எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராணுவ நினைவிடத்தினை இந்திய இராணுவத்தின் தலைமை தளபதி மனோஜ் நரவானே திறந்து வைக்க உள்ளார்.
    • இரண்டாம் உலகப் போரின் போதான மாண்டி கசினோ போரில் (Monte Cassino) பாசிசப் படைகளிடமிருந்து இத்தாலியைக் காப்பாற்றுவதற்காக 5000க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் தங்களது இன்னுயிரை இழந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்