ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், ஹிசார் விமான நிலையத்தை மகாராஜா அக்ரசேன் சர்வதேச விமான நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்துள்ளார்.
ஹிசார் விமான நிலையமானது ஓர் உள்நாட்டு விமான நிலையமாகும். மேலும் இது DGCA உரிமம் பெற்ற மாநிலத்தின் முதல் பொதுத்துறை விமான நிலையம் ஆகும்.s
லாத்வியாவின் ரைகா என்னுமிடத்தில் நடைபெற்ற RTU ஓபன் பிளிட்ஸ் செஸ் (சதுரங்கம்) போட்டியில் (RTU Open blitz chess title) R. பிரக்ஞானந்தா வெற்றி பெற்று உள்ளார்.
R. பிரக்ஞானந்தா, கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற 5வது இளம்வயது நபர் ஆவார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் மணிப்பூரின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நஜ்மா ஹெப்துல்லா ஓய்வு பெற்றதையடுத்து அம்மாநில ஆளுநர் பதவி காலியாக இருந்தது.
2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியா மேலும் 100 நிலநடுக்க ஆய்வகங்களை (observatories) நிறுவும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்தர் சிங் கூறியுள்ளார்
மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டில் மேலும் 35 நிலநடுக்க ஆய்வகங்கள் நிறுவப் படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan), தமது நாடு ஒரு போதும் ஐரோப்பிய அகதிகளின் புகலிடமாக மாறாது என எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் அதிகரித்த அதிக வேலையின்மை உள்ளிட்ட பல சிக்கல்களுடன் அந்நாடு போராடி வருவதால், துருக்கி நாட்டில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வு அதிகமாக உள்ளது.