2020 ஆம் ஆண்டு பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்தியாவின் சிறந்த வில்வித்தை வீரர் ஹர்வீந்தர் சிங் ஆடவருக்கான தனிநபர் வளை வில்வித்தைப் பிரிவில் (recurve open)வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
31 வயதான இவர் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வில்வித்தை வீரராவார்.
2020-21 ஆம் ஆண்டு சர்வதேச பருவநிலை உச்சி மாநாட்டின் ஓர் அங்கமாக ஒரு முக்கிய மாநாட்டினை இந்தியா நடத்த உள்ளது.
தூய ஆற்றலை (clean energy) நோக்கிய இந்தியாவின் பரிமாற்றத்திற்கான ஒரு பேச்சுவார்த்தையைக் கட்டமைப்பதற்காக இது நடத்தப்பட உள்ளது.
இந்தியப் பொதுத்துறை நிறுவன பொறியியலாளர்கள் நிறுவனத்தின் முதல் பெண் தலைவராகவும் அதன் மேலாண்மை இயக்குநராகவும் வர்த்திகா சுக்லா என்பவர் பொறுப்பேற்றார்.
சாகித்திய அகாதெமியால் வழங்கப் படுகின்ற பால சாகித்திய புரஷ்கர் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள பாலபாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.
மரபாச்சி சொன்ன ரகசியம் என்ற ஒரு தமிழ் படைப்பிற்காக இவருக்கு இந்த விருதானது வழங்கப் படுகிறது.