எல் சால்வடார் நாடானது பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்த உலகின் முதல் நாடாகும்.
காலநிலை செயல் திட்டத்தினைச் செயல்படுத்தும் முதல் தெற்காசிய நகரம் மும்பை ஆகும்.
C40 நகரங்களின் காலநிலை தலைமைக் குழுவில் மும்பை இணைந்ததைத் தொடர்ந்து இது நடைபெற்றது.
சத்துணவு மையத்தில் சமையல் செய்வோர் மற்றும் சமையல் உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயதானது 58 வயதிலிருந்து 60 வயதாக உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1200 ஆண்டுகள் பழமையான துர்கா தேவியின் சிற்பம் ஒன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜீலம் நதியில் ஸ்ரீநகரில் உள்ள பாண்ட்ரேதன் என்னுமிடத்தில் இருக்கும் இருந்து மீட்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மௌரியா தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் சமர்ப்பித்தார்.