எழுத்தாளர் சூசன்னா கிளார்க் என்பவர் ‘பிரனேசி’என்ற அவருடைய ஒரு புதினத்திற்காக 2021 ஆம் ஆண்டின் புனைவுக் கதைக்கான மகளிர் பரிசினை வென்று உள்ளார்.
இந்திய குழிப் பந்தாட்ட வீரரான ஜீவ் மில்கா சிங் மதிப்புமிக்க 10 ஆண்டுகால துபாய் நுழைவு இசைவுச் சீட்டினைப் பெற்ற உலகின் முதல் தொழில்முறைக் குழிப்பந்தாட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குநர் பவன் குமார் கோயங்கா, இந்திய தேசிய விண்வெளி மேம்பாட்டு அங்கீகார மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் எனுமிடத்தில் அமைக்கப்பட உள்ள ராஜா மஹேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டியுள்ளார்.
ஆரிய பீஷ்வா என்றும் அறியப்படும் பிரதாப் சிங் 1911 ஆம் ஆண்டு நடைபெற்ற பால்கன் போரில் அங்கம் வகித்தவராவார்.
அதிகாரிகள் தரநிலையிலான பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினை 30 சதவீதத்திலிருந்து 40 சதவிகிதமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
Colexion என்ற ஒரு மிகப்பெரிய உரிமம் பெற்ற பரிமாற்றம் செய்ய இயலாத அனுமதித் தளமானது தனது முறையான தொடக்கத்தினை அறிவித்துள்ளது.
Colexion என்பது விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கலை ஆகிய துறைகளுக்கான பரிமாற்றம் செய்ய இயலாத அனுமதி வழங்கும் ஒரு தளமாகும்.
சுவர்ணிம் விஜய் வர்ஸ் மஷால் (அ) வெற்றி தீபமானது அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்திலுள்ள தஹூங் எனுமிடத்தை வந்தடைந்தது.
1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரில் பெற்ற வெற்றியின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த வெற்றி தீபமானது நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.
உச்சநீதிமன்றமானது ஒரு பணியாளர் தன்னைக் குறிப்பிட்ட இடத்திற்கு மாற்றுமாறு வலியுறுத்த இயலாது என்றும், தேவையைக் கருத்தில் கொண்டு முதலாளி மட்டுமே ஊழியர்களை இடம் மாற்ற இயலும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.