MyGovIndia தளமானது இந்தியப் புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பத் தொழில் முனைவோர்களுக்காக “கோளரங்கப் புதுமை சவாலை” (Planetarium Innovation Challenge) தொடங்கியுள்ளது.
கலிபோர்னியாவில் ஏற்பட்ட இரண்டு காட்டுத் தீயானது சிக்வோயா தேசியப் பூங்காவினூடே (Sequoia National Park) பரவி வருகின்றது.
அமெரிக்காவின் சியரா நெவாடா உலகின் மிகப்பெரிய மரத்தின் வாழ்விடமாக உள்ளது.
நாகாலாந்து மாநிலத்தின் முதலாவது மற்றும் இந்தியாவின் 61வது இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா மையமானது கொஹிமாவில் திறக்கப்ப ட்டது.
ஹங்கேரி நாடானது பிட்காயின் முறையை நிறுவியவரான சதோஷி நாகமோட்டோ (Satoshi Nakamoto) என்பவரின் உருவச் சிலையை புதாபெஸ்ட் என்னுமிடத்தில் நிறுவி உள்ளது.
நிதி ஆயோக் அமைப்பானது இந்தியாவிலுள்ள 112 உயர் லட்சிய மாவட்டங்களிலுள்ள மாணாக்கர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குவதற்காக வேண்டி BYJU’S எனும் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.
Yahoo நிறுவனமானது டின்டர் (Tinder) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜிம் லான்சோன் என்பவரை யாகூ (Yahoo) நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேப்டன் அமரிந்தர் சிங் தனது பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
2022ஆம்ஆண்டிற்குள் 175ஜிகாவாட்அளவிற்குப் புதுப்பிக்கத்தக்கஆற்றல் உற்பத்தித் திறன் மற்றும் 2030ஆம்ஆண்டிற்குள்450ஜிகாவாட் அளவிற்குப் புதுப்பிக்கத் தக்கஆற்றல் உற்பத்தித் திறன் என்ற ஒருலட்சியஇலக்கைஇந்தியாநிர்ணயித்துள்ளது.
டாடாகன்சல்டன்சிசர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனமானது200பில்லியன்டாலர் என்ற மதிப்பிலான சந்தைமூலதனத்தைத்தாண்டியஇரண்டாவதுஇந்தியநிறுவனம்ஆகும்.