சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முழு உறுப்பினராக ஈரான் நாடு அதிகாரப் பூர்வமாக இணைக்கப்பட்டது.
ஈரான் நாட்டினை இந்த அமைப்பின் ஒரு முழு உறுப்பினராக இணைப்பதற்கான முடிவானது தஜிகிஸ்தானின் துசான்பேவில் நடைபெற்ற சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்களின் 21வது உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
கனட நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக அந்நாட்டின் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் 2015 ஆம் ஆண்டு முதல் பிரதமர் பொறுப்பினை வகித்து வருகிறார்.
இந்தியாவைச் சேர்ந்த D. குகேஷ் நார்வே செஸ் ஓபன் 2021 போட்டியின் மாஸ்டர்ஸ் பிரிவில் வெற்றி பெற்றுள்ளார்.