சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது முதியோர்களுக்காக “Elder line” எனப்படும் ஒரு இந்திய அளவிலான உதவி எண்ணினை வெளியிட்டுள்ளது.
இதற்கான இலவச உதவி எண் ஆனது 14567 ஆகும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் தயாரிக்கப்படும் சோஜத் மெஹந்தி எனும் மருதாணிக்கு புவிசார் குறியீடானது வழங்கப் பட்டுள்ளது.
சோஜத் என்னுமிடத்தில் வளர்க்கப்படும் மெஹந்தி இலைகளிலிருந்து உருவாக்கப் படும் சோஜத் மெஹந்தியானது இயற்கையான முறையில் மழைநீரைப் பயன்படுத்திப் பயிரிடப் படுகிறது.
சென்னை எழும்பூரிலுள்ள பழைய காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை அருங்காட்சியகமானது அமைக்கப் பட்டுள்ளது.
இந்தக் கட்டிடமானது 1856 ஆம் ஆண்டில் சென்னையின் முதல் காவல் ஆணையராக இருந்த லெப்டினன்ட் கர்னல் ஜான் கார்ன் போல்டர்சன் என்பவரின் தலைமையகமாக இருந்தது.
நாசாவின் ஆய்வுக்கலனான இன்சைட் செவ்வாய்க் கிரகத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கு உணரப்பட்டதைக் கண்டறிந்தது.
இது செவ்வாய்க் கிரகத்தில் பதிவான மிகப்பெரிய மற்றும் ஒரு நீண்ட நேர நிலநடுக்கமாகும்.