October 29 , 2021
1032 days
451
- அரசிற்குச் சொந்தமான கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனமானது இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலையைக் கட்டமைக்க உள்ளது.
- சூடானின் முன்னணி ராணுவத் தளபதி ஜெனரல் அப்தெல்-ஃபத்தா புர்ஹான் அங்கு ஆட்சியிலிருந்த இறையாண்மை சபையைக் கலைத்து நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார்.
- இவரது படைகள் நாட்டின் தற்காலிகப் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் மற்றும் பிற உயர் அதிகாரிகளை கைது செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப் பட்டது.
- ஈராக் நாட்டின் தொல்லியலாளர்கள் ஒரு மிகப்பெரிய அளவிலான மதுபான தொழிற் சாலையைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தனர்.
- இது 2,700 ஆண்டுகளுக்கு முன்பு அசீரிய மன்னர்களின் ஆட்சியில் இருந்ததாக கூறப்படுகிறது.
Post Views:
451