இந்திய நாடானது ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிகளில் 2 பில்லியன் டாலர் கடன் பெறுவதற்கு வேண்டி விண்ணப்பித்துள்ளது.
700 மில்லியன் கோவிட்-19 தடுப்பு மருந்துகளை வாங்குவதற்காக வேண்டி இந்தக் கடனானது பெறப்பட இருக்கிறது.
குறைவான தடுப்பூசி வழங்கீட்டு வீதம் உடைய மாவட்டங்களில் “ஹர் கர் தஸ்தக்” (Knock Every Door) என்ற ஒரு பிரச்சாரத்தினைத் தொடங்க சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இது தடுப்பூசியைப் பெறுவதற்கு மக்களை உற்சாகப்படுத்தவும், ஊக்குவிக்கவும் வேண்டி மேற்கொள்ளப் படும்.
இந்தியா-பசிபிக் பிராந்தியப் பேச்சுவார்த்தையாது (2021) மூன்று நாட்கள் அளவிலான ஒரு இணைய நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது.
“21 ஆம் நூற்றாண்டில் கடல்சார் உத்திகளின் பரிணாமம் : கட்டாய முடிவுகள், சவால்கள் மற்றும் முற்போக்குப் பாதை” என்ற ஒரு கருத்துரு மீது இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படும்.
TVS மோட்டார் கம்பெனி (நிறுவனம்) ஆனது இந்தியப் பசுமை ஆற்றல் விருதினைப் பெற்றுள்ளது.
இது “சிறந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டாளர்” என்று அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
திரு. ஸ்டாலின் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் முதலியார் குப்பம் என்னுமிடத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.