மைக்ரோசாப்ட் கார்ப்பரேசன் நிறுவனமானது ஆப்பிள் நிறுவனத்தை விஞ்சி சந்தை மூலதனத்தில் உலகின் மிகவும் மதிப்புமிக்க ஒரு பொது வர்த்தக நிறுவனமாக மாறி உள்ளது.
மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் உத்தரகாண்டின் முசௌரியிலுள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகப் பயிற்சி நிறுவனத்தில் சர்தார் படேல் தலைமைத்துவ மையத்தினைத் திறந்து வைத்தார்.
இந்த வசதி மையமானது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று நடைபெற்ற ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் அன்று திறந்து வைக்கப் பட்டது.
ஆசிய மேம்பாட்டு வங்கியானது இந்தியாவின் தேசியத் தொழில்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டத்திற்கு உதவி வழங்குவதற்காக 250 மில்லியன் டாலர் கடனுக்கு (ரூ.1575 கோடி) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது 17 மாநிலங்களில் 11 தொழில்துறை வழித்தடங்களை உருவாக்குவதற்காக 500 மில்லியன் டாலர் கடன் வழங்கும் திட்டத்தின் முதல் துணைத் திட்டமாகும்.
தேசிய சிறியத் தீப்பெட்டித் தயாரிப்பாளர்கள் சங்கமானது ஒரு தீப்பெட்டியின் விலையை 1 ரூபாயிலிருந்து 2 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
2007 ஆம் ஆண்டில் ஒரு தீப்பெட்டியின் விலையானது 50 பைசாவிலிருந்து 1 ரூபாயாக உயர்த்தியதற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து இந்த விலை உயர்வானது அறிவிக்கப் பட்டுள்ளது.
உலக சைவ உணவுப் பழக்கத் தினமானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1 அன்று அனுசரிக்கப் படுகிறது.
மனிதர்கள், மனித இனத்தைச் சாரா விலங்குகள் மற்றும் இயற்கை சூழல்களுக்கு சைவ உணவுப் பழக்கத்தால் ஏற்படும் நன்மைகளைப் பரப்பும் நோக்கத்துடன் இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.