அமெரிக்க உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான நோவாவாக் தயாரித்த கோவிட் – 19 தடுப்பு மருந்தினை இந்தோனேசியாவில் பயன்படுத்துவதற்காக வேண்டி அந்த நிறுவனம் முதன்முறையாக அதன் அவசரகாலப் பயன்பாட்டிற்கு ஒப்புதலைப் பெற்றுள்ளது.
இந்தத் தடுப்பு மருந்தானது இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு கோவோவாக்ஸ் என்ற பெயரில் இந்தோனேசியாவில் விற்பனை செய்யப்படும்.
பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான தினமானது நவம்பர் 02 அன்று அனுசரிக்கப்பட்டது.
பத்திரிக்கையாளர்களின் மரபு மற்றும் சாதனைகளை நினைவு கூறவும், அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கோரியும் வேண்டி இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் அக்டோபர் 31 அன்று ஹாலோவீன் தினமானது கொண்டாடப் படுகிறது.
104 வயதான ஷியாம் சரண் நேஹி இந்தியாவின் மிக வயதான வாக்காளராக கருதப் படுகிறார்.
இவர் சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள மாண்டி என்ற நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வாக்களித்தார்.
களிமண்ணைப் பயன்படுத்திப்பட்டாசு தயாரிக்கும் 400 ஆண்டுகள் பழமையான முறையானது குஜராத்தின் வடோதராவில் ஒரு சிறு மறுமலர்ச்சியைக் கண்டுள்ளது.
இந்த வகைப் பட்டாசுகள் கோதிஸ் என்று அழைக்கப் படுகின்றன.