மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த 18 வயதான சங்கல்ப் குப்தா இந்தியாவின் 71வது கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
சங்கல்ப் குப்தா செஸ் போட்டியில் 24 நாட்களில் மூன்று அவசியமான கிராண்ட் மாஸ்டர் விதிமுறைகளை நிறைவு செய்த பிறகு இந்த அந்தஸ்தினை அடைந்தார்.
COP26 காலநிலை உச்சி மாநாட்டில் தொடங்கப்பட்ட இங்கிலாந்தின் கிளாஸ்கோ வழி முறைகளில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார்.
இது 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்துப் பகுதிகளிலும் சுத்தமான மற்றும் மலிவான தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான ஒரு சர்வதேசத் திட்டமாகும்.
அமெரிக்காவில் தீபாவளியை ஒரு கூட்டாட்சி விடுமுறையாக அறிவிப்பதற்கான ஒரு மசோதாவினை பிரதிநிதிகள் சபையில் அறிமுகப்படுத்தியுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
இது நியூயார்க்கைச் சேர்ந்த கரோலின் பி மலோனி என்பவர் தலைமையில் மேற்கொள்ளப் பட்டது.