ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 10 ஆம் தேதி உலக நோய்த்தடுப்புத் தினமாக கொண்டாடப் படுகிறது.
தடுப்பூசி-தடுக்கக்கூடிய நோய்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் பெறுவதன் ஒரு முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக வேண்டி இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
கொல்கத்தாவைச் சேர்ந்த மித்ரபா குஹா இந்தியாவின் 72வது சதுரங்க விளையாட்டு கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
20 வயதான அவர் செர்பியாவில் நடந்த போட்டியின் போது கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான தனது மூன்றாவது மற்றும் இறுதித் தகுதியைப் பெற்றதன் மூலம் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார்.
இந்தியக் கடற்படையின் அடுத்தத் தளபதியாக வைஸ் அட்மிரல் ஆர் ஹரி குமார் என்பவர் பொறுப்பேற்க உள்ளார்.
தற்போதைய, அட்மிரல் கரம்பீர் சிங் நவம்பர் 30 அன்று ஓய்வு பெற்ற பிறகு இவர் அந்தப் பதவியில் பொறுப்பேற்பார்.