TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 17 , 2021 1013 days 531 0
  • முதலாவது ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ் அல்லது பழங்குடியின கௌரவ தினத்தன்று பகவான் பிர்சா முண்டா நினைவு மற்றும் சுதந்திரப் போராட்ட நினைவு அருங்காட்சியகத்தை ஜார்க்கண்டின் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
    • ஜன்ஜாதிய கெளரவ் திவாஸ் நவம்பர் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • கலாச்சாரம் சார்ந்த சொத்துக்களை சட்டவிரோதமாக கடத்துவதற்கு எதிரான சர்வதேச தினமானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது.
    • ஒவ்வோர் நாட்டிலும் திருட்டு, சூறையாடுதல் மற்றும் கலாச்சாரம் சார்ந்த சொத்துக்களை சட்டவிரோதமாக கடத்துதல், மக்களின் கலாச்சாரம், அடையாளங்கள் மற்றும் வரலாற்றைச் சூறையாடுதல் போன்றவை நிகழ்வதால் இந்தக் குற்றங்களை எதிர்த்துப் போரிட நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை இத்தினமானது உலகிற்கு நினைவூட்டுகிறது.
  • மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிப்பதற்கு 14417 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.
    • மேலும் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து விளக்கமளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்