18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் மாடர்னா மற்றும் ஃபைசர் கோவிட் தடுப்பூசி பூஸ்டர் தொகுப்புகளை வழங்கும் அங்கீகாரத்தை அமெரிக்கா நீட்டித்துள்ளது.
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் இலகுரக போர் ஹெலிகாப்டரை பிரதமர் மோடி இந்திய விமானப்படையிடம் முறைப்படி ஒப்படைத்தார்.
இது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வடிவமைத்துத் தயாரித்த பல வகையில் தாக்கக் கூடிய ஒரு ஹெலிகாப்டர் (multi-role attack helicopter) ஆகும்.
திரிபுராவின் அகர்தலாவில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக மத்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் மீதான இந்தியாவின் சந்திப்பை தலிபான்கள் வரவேற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் மண் யாருக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்பதை டெல்லி உரையாடல் உலகிற்கு உறுதி செய்தது.
லக்னோவில் உத்தரப் பிரதேசப் பாதுகாப்புத் தொழில்துறை பெருவழிப் பாதையில் (Uttar Pradesh Defence Industrial Corridor) முதலாவது செயல்பாட்டுத் தனியார் துறைப் பாதுகாப்பு உற்பத்தி நிலையத்தைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
நவம்பர் 14 அன்று தேசியக் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் சட்டமன்றக் கூட்டம் நடத்தப் பட்டது.
ராஜஸ்தான் சட்டப் பேரவையானது, நாட்டிலேயே குழந்தைகளுக்கான அமர்வை ஏற்பாடு செய்த முதல் சட்டமன்றமாக உருவெடுத்துள்ளது.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவிற்குப் பின், கர்நாடக மாநிலத்தின் உயரிய விருதான ‘கர்நாடக ரத்னா விருது’ அவருக்கு வழங்கப்படவுள்ளது.
ஸ்பானிய மற்றும் ஜெர்மன் நடிகரான டேனியல் ப்ரூல் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் நல்லெண்ணத் தூதராக (Goodwill Ambassador) நியமிக்கப் பட்டு உள்ளார்.
‘ஸ்ரீத்ராமாயணம்’ என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் ஹைதராபாத் நகரில் வெளியிட்டார்.
இப்புத்தகமானது சசிகிரணாச்சாரியா அவர்களால் எழுதப்பட்டது.
தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.