பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், 5வது உலகப் பேரிடர் மேலாண்மை மாநாட்டினை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்திய அரசும் ஆசிய மேம்பாட்டு வங்கியும் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
13 மாநிலங்களிலுள்ள நகர்ப்புறப் பகுதிகளில் விரிவான ஆரம்பச் சுகாதார மருத்துவச் சேவைகளை அணுகும் வசதிகளை வலுப்படுத்தவும், அதனை மேம்படுத்தச் செய்யவும் இந்தக் கடன் ஒப்பந்தம் உதவும்.
மத்தியப் புலனாய்வு அமைப்பின் சிறப்பு இயக்குநர் பிரவீன் சின்ஹா சர்வதேசக் குற்றவியல் காவல் அமைப்பின் (INTERPOL) நிர்வாகக் குழுவிற்கான ஒரு ஆசியப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
ஐக்கிய அரபு அமீரகத்தினைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் அகமது நாசர் அல்-ரைசி உலகக் காவல் அமைப்பின் தலைவராக 4 ஆண்டுகள் அளவிலான ஒரு பதவிக் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.