தற்போது உலகிலேயே அதிக அளவில் அந்நியச் செலாவணி இருப்பைக் கொண்டுள்ள 4வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு தற்போது 640.4 பில்லியன் டாலர்களாக உள்ளது.
ராணுவத்தின் 21வது பாரா (துணை ராணுவம்) சிறப்புப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அசாம் எல்லைக்கு அருகேயுள்ள நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் ஓடிங் கிராம மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, அம்மாநிலத்தின் கோஹிமாவில் நடைபெறும் புகழ்பெற்ற ஹார்ன்பில் திருவிழா நிறுத்தப் பட்டது.