மாற்றுத் திறனாளிகளின் திருமணங்களை கோவில்களில் இலவசமாக நடத்துவதற்கு அனுமதி வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குப் பொருந்தும்.
பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பல பொது மக்களின் உயிரைப் பலி வாங்கியது தொடர்பாக மத்திய அரசிற்கும் நாகாலாந்து மாநில அரசிற்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு காரணம் கோரும் அறிவிப்பினை (நோட்டீஸ்) அனுப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மத்திய இராணுவத் துறைச் செயலாளர், மத்திய உள்துறைச் செயலாளர், நாகாலாந்தின் தலைமைச் செயலாளர் மற்றும் அம்மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு அந்த ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது.
பிரபாத் குமார் எழுதிய “Public Service Ethics – A Quest for Naitik Bharat” என்ற புத்தகத்தினை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் M. வெங்கய்யா நாயுடு வெளியிட்டார்.
இப்புத்தகமானது நெறிமுறைக் கொள்கைகளை வாழ்க்கையின் நடைமுறையாக பின்பற்றும் மனித குணத்தின் பல பரிமாணங்களைப்பற்றி எடுத்துரைக்கிறது.