ஒரு நாள் போட்டி மற்றும் சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் விராட் கோலியை அடுத்து இந்தப் பொறுப்பினை ஏற்கிறார்.
15 மாத நீண்ட காலத்திற்குப் பிறகு, விவசாயிகள் அமைப்பின் தலைவர்கள் தங்களது போராட்டத்தை நிறுத்த முடிவு செய்து 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று டெல்லியின் எல்லையில் தங்களது போராட்டக் களங்களை விட்டு வெளியேறினர்.
ஒன்றிய இந்திய அரசானது குறைந்தபட்ச ஆதரவு விலை மீதான ஒரு குழுவை அமைப்பதாகவும், போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுவதாகவும் உறுதியளித்து விவசாயிகளுக்குக் கடிதம் அனுப்பியதை அடுத்து அவர்கள் இந்த முடிவினை மேற்கொண்டனர்.
2020 ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகளானது சமீபத்தில் வழங்கப்பட்டது.
மாற்றுத் திறனாளி நீச்சல் வீரரான முகமது சாம்ஸ் ஆலம் சயக் சிறந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரருக்கான ஒரு விருதினை வென்றார்.
உலகின் முன்னணி வீராங்கனையான ஆஸ்திரேலிய நாட்டின் ஆஷ்லே பார்ட்டி (Ashleigh Barty), ஆண்டின் சிறந்த WTA வீரருக்கான விருதினை 2வது முறையாக வென்று உள்ளார்.
அமெரிக்காவின் ஓபன் சாம்பியன் எமா ரடுகானு இந்த ஆண்டின் புதுமுகமாக தேர்வு செய்யப்பட்டார்.