TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 24 , 2022 944 days 507 0
  • சமீபத்தில், புது தில்லியின் அமர் ஜவான் ஜோதி அணைக்கப்பட்டது என்ற வாதத்தை மத்திய அரசு நிராகரித்தது.
    • அருகாமையில் அமைந்த "தேசிய போர் நினைவகத்தில்" உள்ள ஜோதியுடன் அமர் ஜவான் ஜோதி சுடர் இணைக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் மேலும் வலியுறுத்தி கூறியுள்ளது.
  • ரியாசி மாவட்டத்தில் உள்ள ஜெர்ரி குடியேற்றப் பகுதியானது, ஜம்மு & காஷ்மீரின் முதல் 'பால் கிராமமாக' அறிவிக்கப்பட்டது.
    • குக்கிராமத்திற்கெனத் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 57 பால் பண்ணைகள் இங்கு திறக்கப்பட அனுமதிக்கப் பட்டுள்ளன.
  • பிரதமர் நரேந்திர மோடி, காணொலி வாயிலாக ‘ஆசாதி கே அம்ரித் மஹோத்சவ் சே ஸ்வர்னிம் பாரத் கி ஓரே’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
    • இந்த தேசிய அளவிலான திட்டமானது  ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற கொண்டாட்டத்திற்காக பிரம்ம குமாரிகளால் அர்ப்பணிக்கப்பட்ட ஏழு ஆண்டு கால முன்னெடுப்புகளை உள்ளடக்கியது.
  • ரஷ்யாவின் மத்திய வங்கியானது இணைய சங்கேதப் பணத்திற்கு எதிரான நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்கு முன்மொழிந்தது.
    • ரஷ்யா உலகளவில் மிகப்பெரிய இணைய சங்கேதப் பண உற்பத்தி நாடுகளில் ஒன்றாக உள்ளதால் இந்த நடவடிக்கையானது வளர்ந்து வரும் மெய்நிகர் பணத் துறையைச் சீர்குலைக்கக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்