TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 17 , 2022 892 days 596 0
  • டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் N. சந்திரசேகரன் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், N. சந்திரசேகரன் டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஐந்தாண்டு கால தலைவர் பதவிக்கு இரண்டாவது முறையாக மீண்டும் நியமிக்கப் பட்டார்.
  • 2022 ஆம் ஆண்டு ஜெர்மன் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய ஷட்லர்(பூப்பந்தாட்ட வீரர்) லக்சயா சென் வெள்ளி வென்றார்.
    • இவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த குன்லவுட் விடிட்சார்னிடம் தோல்வியுற்றார்.
  • கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப் பட்ட பல்வேறு மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    • கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் இன்றியமையாத மத நடைமுறை அல்ல என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
  • தமிழகத்தில் மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
    • அரசாங்கம் அதற்கான நிலத்தைக் கண்டறிந்து, அதில் பூங்காவை உருவாக்கத் தேவையான ஆதரவை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
  • இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னையில் 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.
    • சர்வதேசச் சதுரங்கக் கூட்டமைப்புச் சபையானது, போட்டி நடைபெறும் இடத்தை மாஸ்கோவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்திருந்தது.
  • ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியானது, 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அதன் 100 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பெண் மாணவர்களைச் சேர்க்க உள்ளது.
    • 2022 ஆம் ஆண்டில் ஐந்து பெண் மாணவிகள் அந்தக் கல்லூரியில் சேர உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்